பக்கங்கள்

21 May 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-1

எங்கிருந்தோ இந்தவழியால் ஏன் வந்தேன்?
ஏன் தொலைந்தேன் ?

என்பூர்வபூமியில் இனவாதம் எல்லையில்
எழும்பி ஓடு என்றது வெறியாட்டத்தில்!
என் உயிர் தப்பி ஏன் வந்தேன்?
என்ற கேள்விக்கு ஏது பதில்?
என்றாலும் 
எனக்குள்ளும் இலக்கிய /இசையாசையில்
எங்கோ இன்னும் வாழ்கின்றேன்.
ஏதோ முகம் தொலைந்து
என்னுயிர்த்தோழியே என்பிழையும்
எழுத்துப்பிழையும்
ஏதிலிப்பிழையும் எப்போதும் என்னை அறிவாய்
என்ற எதிர்பார்ப்பில்
எங்கள் குலதெய்வம் ரெக்கில் அன்னையின்!
 எல்லையில் தீபம் ஏற்றி
எடுத்துவருகின்றேன் எந்தன் காவடி!

      என்றும் நட்புடன் நண்பனுக்கு
           ஏழுத்தாணி ஏற்றும்
              தனிமரம்.
என்று சொல்லிச் செல்லும் !

எனக்குப்பின் இருக்கும் சேகர் வாழ்வில்

எந்த முட்கள் நெஞ்சில் குத்தினாலும்
என்றும் கேட்காதே எங்கள்
ஊருக்கு எப்போது வருவீர்கள்?
எல்லோரையும் பார்க்க .எங்களை
எல்லாரையும் என்றும் அன்புடன்,
எப்போதும் சந்தோஸத்துடன்,
எப்போது வாழ்த்துவீர்கள்?
எங்களுக்கு நீங்கள் இன்னும் 
எங்கள் உயிர் நாயகனே!


எங்கள் நட்பில்  நீங்கள் 
என்றும் இலகணம் 
எங்களுக்குப் பிடிக்கவில்லை
எந்த பிடிவாதமும் உன்னிடம்
என்னையும் மன்னிக்க வேண்டும்
  ...........,என்றும் இவள் மீருனா!

          எழுதியது--18/1/2008 (நாட்குறிப்பில்)

பாரிஸ்வானில் குளிர்கால நேரமாற்றம், இன்னும் கொஞ்சநேரம் குறட்டைவிட ஆசையிருந்தாலும் !அடுத்து அடுத்து அடிக்கும் அலாரம் மணிகேட்டு எழும்பினான் அந்த 18  அடி அறையில் படுத்திருக்கும் சேகர் .அருகில் மேல்தளத்தில் படுத்திருக்கும் அஜய் என்னடா ?இப்ப தான் அதிகாலை  4 மணி அதுக்குள்ள அங்கிருந்து அழைப்போ? அங்க  இப்ப என்ன நேரம் என்று நீர்கொழும்பு முத்துலிங்கம் எழுதிய  நூல் படிக்காட்டியும் இங்கு என்ன நேரம் என்று தெரியவேண்டம் உன் உறவுகளுக்கு ?

நல்ல சினேஹா கனவில் படுத்துதிருக்கும் போது பாதியில் எழுப்பும் பாவிகளின் தொலைபேசி அழைப்பை தூக்கிவை ரிசிவரை இனி தூக்கிவைத்துவிட்டுத்தான் படுக்கணும் .


காலங்காத்தாலேயே கடுப்பூ ஏத்திராங்க நீயும் தூங்காமல் இப்படி ஏண்டா வீணாப்போகின்றாய் சேகர் .இப்ப எல்லாம் நம்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டில் இருப்போர் என்ன புக்கிள் போலவா காசு பரிமாற்றம் செய்ய தினமும் எங்கள் வாழ்க்கையே அன்றாடம் காட்சித்தான் இது என்ன சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் சின்னப்புள்ளத்தனமான செயல்போலவா இருக்கு? என்று சீண்டிவிட்டு மீண்டும் படுத்தான் அஜய் .!

தொடரும்.....
அறிமுகம் இங்கே....http://www.thanimaram.org/2013/05/blog-post_20.html.

20 May 2013

.என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி! அறிமுகம்.


வலையில் தனிமரத்தை நாடி ,ஆக்கமும் ஊக்கமும் தந்து அரவணைக்கும் அன்பான உறவுகள் அனைவருக்கும் வழிப்போக்கன் தனிமரத்தின் முதற்கண் வண்ணத்தமிழ்


மீண்டும் ஒரு காதல் ராகம் மீட்டும் 


இந்த நீண்ட தொடர் பயணத்தை உங்கள் பார்வைக்கு வலையில் ஏற்றுகின்றேன் அடுத்த பகிர்வு முதல்.!

நல்ல நட்புக்களின் புரிதல் எப்போதும் நல்ல செயல்களை முன்னெடுக்க ஊக்கசக்தியாக அமையும். அப்படியான நட்புவட்டத்தில் இந்தக் காதல் என்ற கவ்வாத்துக்கத்தி பலநேரங்களில் உறவுகளின் ரத்தம் கேட்கும் கோபத்தில் குளிர்காய என்பதும் ,அதன் பின் நிதானிக்கும் போது மனச்சிறைக்கதவுகளின் பின்னே கண்ணீர்ப்பூக்கள் சிந்தும் .

இப்படி செய்யத் தூண்டிய அந்தக்கணங்கள் ஒரு நொடியில் சுயம் இழந்த மனிதம் பற்றிய விடயத்தோடு இந்தத்தொடர்.எனக்குப் பிடித்தமான பலநட்புக்களின் வட்டத்தில் ஒருசில மலையகநண்பர்களின் வாழ்வில் அவர்கள் சந்தித்த ஒரு மறக்கமுடியாத சம்பவத்தின் காலத்தின் சுவடுகளை .எனக்குப் பிடித்த பாடல்களும் ,கவிதைகளும் சுமந்து.கதையாக தொடரும் இந்தத்தொடர். செல்லும் பூமித்தேசம் துங்கித்தைச் சாரலில் துள்ளிக்குதித்து காணாமல் போன ஒரு வழிப்போக்கன் நட்பு வாழ்வில் ஒரு சம்பவமே .


அவர்களை தனிமரமும் அறியும் விற்பனைப்பிரதிநிதியாக வலம் வந்த காலத்தில்  .!!அவர்களை மீண்டும் சந்திக்கும் காலம் வருமா என்றாள்??? எனினும் அந்த மலையகத்தின் இன்னொரு தோடி ராகம் இந்தத் தொடர்!



பதுளையில் தொடங்கி எங்கோ செல்லும் விதியின் பாதையில் தொலைந்த இந்த மாந்தர்கள்!சாமானியவர்கள் என்றாலும் ஏதோ ஒன்றைச் சாதித்தவர்கள் .அவர்களின் வாழ்க்கைப் பாதையில் அந்த அனுபவத்தை தனிமரத்துடன் பகிர்ந்த போது இலக்கிய ஆசையில்  தொடர்கின்றேன்.
இந்தத்தொடரும் தகுதியுள்ளதோ இந்த பதிவுலக மேடையில் நான் அறியேன்!


எப்போதும் படிக்காதவன் இவன் அதிகம் எழுத்துப்பிழைவிட்டாலும் ,என் நட்பில் தோள் கொடுக்கும் இந்த நண்பன் உதவியுடன் .

மீண்டும் மலையகவீதி வழியே பதிவுலக உறவுகள் உங்கள் பலரையும் அழைத்துச் செல்ல இருக்கின்றேன் .


இந்த பஸ்சில் ஏறிக்கொள்ள வாருங்கள் என் உயிரே என்னைப்பிரியும் ஒரு நொடியில் !


என்றும் நட்புடன்
தனிமரம் .


இந்தப்பாடல் கேட்ட வண்ணம்!

//கவ்வாத்துக்கத்தி-தேயிலைத்தோட்டத்தொழில் செய்வோரின் இன்னொரு ஆயுதம்!ம்ம்ம்ம்