பக்கங்கள்

30 May 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -58

அயிரம் நாமம் கொண்ட எங்கள் ஆத்தா அங்காலப்பரமேஸ்வரி அபிராமிப்பட்டரின் அந்தாதி பாடலில் அழகு மூக்குத்தி வடிவான தாயின் வீதி உலாவோடு மீண்டும் இணைகின்றோம் என்று முத்தையா ஜெகன் மோகன் ஒலி வாங்கியை வானொலியோடு இணைக்கும் போது அதை நாதஸ்வரம் கொண்டு பீப்பீ.. என வாசிப்பார் செல்லையா!
செல்லையா வடக்கில் அளவெட்டியில் குருகுலமாக இருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றவர். இந்தியன் ஆமிக்காலத்தில் பின் தான் அங்கிருந்து வந்து சொந்த ஊரில் தோட்ட வேலைகள் செய்தாலும் தன் கலையார்வத்தை சமயங்களின் போது மறக்காமல் வாசிப்பார். அவருக்குத் தெரியும் இந்த வீதியில் எந்த சுருட்டுக்கடை முதலாளிக்கு எந்த பக்திப்பாட்டு வாசித்தால் வெற்றிலையில் வைத்து அன்பளிப்புத் தருவார்கள் என்று.. அந்த அன்பளிப்பு அடுத்த நாள் அவர்கள் பிள்ளைகளுக்கு புதிய புதிய ஆடையாக போய்ச் சேரும். அவர் நல்லா வாசிக்க வேண்டும் என்றால் அவருக்கு உரு ஏற்ற வேண்டும்! உரு ஏற்றுவது என்றால்...? அது உனக்கு புரியாது சுகி எனக்குப் புரியும்! நீ அக்காளுக்கு முன் ஜொள்ளு வழியிறாய் என்று, இரு வீட்டில் பத்திவைக்கின்றேன் என்று சொல்ல,  போடி உங்க அக்காளும் நீயும் நான் இங்கு வேற ஆளைப்பார்க்கின்றேன்!

ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா? இரு பங்கஜம் பாட்டிக்கு கடிதம் போடுறன் உன்ர பேரன் பதுளையில் கொழுந்து எடுக்கப்போறாராம் என்று..

 நீயே  பாட்டியிடம் போட்டுக்கொடுத்துவிடுவாய்போல...! அதைவிடு சுகி உரு என்று சொன்னது செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்! நீ வரவர மோசமாகிவிட்டாய் குண்டா படிக்கிறீயோ இல்லையோ இந்த வேலை எல்லாம் நல்லாச் செய்யிறாய்!

உங்க அப்பாதானே எல்லாம் பழக்கின்றார்! சுருட்டுக்கடை வியாபாரம் மட்டும் தான் வாழ்க்கை என்று... எனக்கு இது எல்லாம் பிடிக்காது பாரு, பரீட்சைமுடிய ஓடப்போறன்!
அது பிறகு பார்ப்பம் முதலில் தேங்காய் உடைக்கப் போறன், கொஞ்சம் தள்ளி நில்லு! வீதியுலா வரும் அம்மனுக்கு கும்பம் வைத்து பலர் பல படையல்கள் வைப்பார்கள்! கடலையும் அவலும் வாழைப்பழமும் மிதமிஞ்சிய அளவு போறவாற பக்தர்களுக்கு இந்த வீதியில் தாராளமாக கொடுப்பார்கள் சுருட்டுக்கடை முதலாளிமார்கள்! மஞ்சள் பூசிய தேங்காய் குவியலாக இருக்கும்; அதில் தான் வீரம் காட்டுவார்கள் இளையவர்கள்!


வருடத்துக்கு ஒரு முறை கட்டும் வெள்ளை வேட்டி சலவைக்காரன் திட்டித் திட்டி வெள்ளாவி வைக்க காரணம் தேங்காய் உடைத்தானா இல்லைமஞ்சள்த்தண்ணி ஊத்தின 16 வயதினிலே பாரதிராஜா படபாடலோ பாடிணவங்க போல மஞ்சளின் குளிர்த்தவனோ முதலாளி என்று அவர் தன் பங்குக்கு ராகுலுக்கு லாடம் கட்டினாலும், அந்த நேரம் தேங்காய் அடிக்கும் போது மாமாவில் நேற்று படம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்த்து உடைக்கும் சிதறு தேங்காய் அதுதான்! பலர் கூடி அடிக்கும் போது வரும் சந்தோஸம் வருடத்துக்கு ஒரு முறைதானே இதே ஊரில் என்றால் எத்தனை குவியல் தேங்காய் வைப்போம்! தேரடியில் உடைக்க என்ன செய்ய ஆத்தா இங்கவர வச்சிட்டா! அடுத்த முறை சரி ஊரில் பங்கஜம் பாட்டியோட சேர்ந்து உடைக்கணும் என்று வேண்டிக்கொண்டான் அம்மனிடம். தேங்காய் உடைத்தது போதும் ராகுல் இதை எல்லாருக்கும் கொடு எங்கிருந்து பார்க்கின்றார் செல்லன் மாமா என்று நிதானிக்காதவன் அவர் குரல் கேட்டதும் பெட்டிப்பாம்பு ஆகிவிடுவான்!. எல்லா அலுவலும் முடியும் போது தான் பெரியமச்சாள் உள்ளே போய்விட்டாள் என்ற உண்மை புரிந்து கொண்டான்! கோலாவில் ஒரு கூத்துக்கு அவன் செல்லையா அண்ணாவிடம் கொடுத்தான்! அவர் வாசிப்போடு தேர் இந்த வீதியைக் கடந்து செல்லவும் தேங்காய் பொறுக்குவார்கள் நகரசபை தொழிலாலிகள் ஆடி ஆடி வந்த அம்மன் இந்த வீதிகடந்து தன் கோயில் பீடம் செல்லும் பசறை வீதியூடாக....! 

அடுத்த விழா! பெளர்னமியில் நிலவு வெளிவர அந்த நிலவையும் மீறி இந்த வீதி ஜொலிக்கும்! அதுக்குள் வீட்டில் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள் எல்லாரும்! மாமியும் அவசரமாக புட்டு அவித்தா சாப்பாட்டுக்கு இரவு சாப்பாடு முடித்தபின் அடுத்த விழா சொர்க்க விழா!

தொடரும்...

29 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---57

கலைகள் 64  இருந்தாலும் ஆடற்கலை காண்போரை சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும் .

நவரசங்கள் .அதுவும் !

நம் மலையகத்தில் இந்த கலைகள் அதிகம் ஆடும் இடமாக இருப்பது எல்லாம் ஆலய தேர் உலாவில் தான் .


அப்படி ஆடும்போது அவர்கள் மனதிற்கு இந்தக்கலைக்கு இன்னும் உயிர் இருக்கு  ரசிக்க பல விழிகள் உண்டு என்று நினைத்து ஆடும் ஆட்டம் தான் பொய்க்கால் குதிரையாட்டம் .!


இரண்டு குதிரை பூட்டினது போல இவர்கள் தோழில் இரு துணியைக் கட்டி  அதிகமான பாரத்தோடு அந்த இந்திரன் வாறான் புரவியில் !

இந்த சந்திரன் வாறான் குதிரையில் போவோமா ?

நாம் இருவர் போருக்கு!
 தோட்டம்  பாடும் பரணி கேளு  ?

என்று சொல்லம் வந்தோம் !ஐயா வீதிக்கு !மறந்து விட்டு என்ன பேச்சு ?

மாரியம் தேரிலே ஆட்டம் பார்க்கும் ரசிகரே அடித்திடுவீர் விசிலையே?

 என்ற போதே அவர்களை பொய்க்கால் குதிரை ஆட்டம் !

ஆட்டக்கூட்டியந்த அப்பையும் சேர்ந்தடிப்பார் விசில் !

 குதியை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் பார்க்க   ஓடி வருவார்கள்.

 எப்படித்தான் இந்த குதிரைபோல

ம் இவர்கள் முன்னுக்கும் ,பின்னூக்கும் தூக்கி ஆடுகின்றன் !

ஆட்டம் கற்றார்களோ ?என்று என்ன வைக்கும் முகத்துக்கு நல்ல வண்ணக்ககலர் பூச்சுப் பூசி அவர்கள் உண்மை முகம் தெரியாது குதிரை பச்சைக்கலரில் துணி செய்து பார்ப்போரை நிஜம் தானா அவர்கள் ஆட்டம் என்று எண்ண வைக்கும் !

ஒவ்வொரு கடைக்கும் முன்னும் இருக்கும் ஆட்கள் எல்லாம் பொய்க்கால் குதிரையோடு சேர்ந்தாடி  ஒரு புகைப்படம் எடுத்து வைக்க ஆட்களைத் தேடினால் !

புகைப்படம் எடுக்கும் கலைஞர் அம்மனை
மட்டும் அடுத்த!

நாளிழக்கும் தன் திறமையைக்காட்டவும் பல வண்ணங்களில் படம் எடுப்பார் !

இவரை அழைத்துவர சுருட்டுக்கடையின் பெயரைச் சொன்னால்  தான் போற போக்கில் கொஞ்சம் கைக்கு காசு கிடைக்கும் என்று குழுவாக புகைப்படம் எடுப்பார் !

என்ன எடுத்தும் அவர்  படம் அடுத்த வருடம் தான் வரும் கைகளுக்கு .அப்போது!


பொய்க்கால் குதிரையாடி வர அடுத்து வரும் ஆட்டம் ஒரு  விசித்திரம் இங்கே கோயில் விழாவுக்கு போனால் சாமி கும்மிட்டமா !


சந்தோஸமா கடலை வாங்கி சாப்பிட்டு வருவதுடன் முடிந்துவிடும் ஊரில் இருந்து வந்தவருக்கு !

இன்னும் சாமியே பார்க்கவில்லை என்று ஏங்கும் கண்களுக்கு என்ன போவோமோ வீட்டை?

 என்று மாமி இருப்புக்கொள்ளாமல் மறுபக்கத்தில் இருந்து கூப்பிடுவது கேட்கும் .


என்றாலும் கொஞ்சம் இருங்கோ மாமி !

இந்தா வந்திடும்  என்று ராகுல் சொல்லவது.

 என்னவோ பொய்தான் .ஆண்டுக்கொருதரம் இந்த வீதியில் இப்படி அம்மன் உலாவரும் போதுதான் பலர் ஊரில் இல்லாத ஆட்டத்தை இங்கு போடுவது !


சுருட்டுக்கடையில் இருக்கும் ஊர் பொடியங்கள் எல்லாம் எங்கே எங்கே என்று வழிமீது விழிவைத்துக் காத்திருக்கும் ஆட்டம் தான் மயில் ஆட்டம்!


 தோகை மயில் போல விதம் விதமாக சோடித்த ஆட்கள் எல்லாம் குயில்கள் மயில்லாட்டம் போடும் அதில் ஒரு ஆண்மயில் மட்டும் அங்கும் இங்கும் பார்க்கும் !


யாரவது மயில் ஆடும் குயிலுக்கு கூண்டில் அடைக்கும் வழிபோல ஏதாவது எழுதிக்கொடுக்கின்றாங்களா என்ற நோட்டத்தோடு நடுவில் வந்து ஆடிக்கொண்டிருக்கும் !


 இந்தக் காட்சியை வர்ணிக்க எத்தனை அறிவிப்பாளர்கள் வந்தாலும் முடியாது !


அந்தளவு தோல் வாத்தியமான பாண்ட வாசிக்கும் !.

ஒலி அதிகம் புதிய சினிமாப்பாடல்களை இசைப்பார்கள்.!

என்ன சுகி நீ இவையோட இதில் நில்லு .

நம்ம பசங்க வந்திட்டாங்க!

 ஒரு ஐஞ்சு நிமிசத்தில் வாரன் .

"நீ திருந்தமாட்டாய் இரு அப்பாட்ட சொல்லுறன் "


இன்று அவர் ஒன்றும் சொல்லமாட்டர் !


சொன்னி என்றால் குட்டு விழும் .


நான் சொல்லாட்டியும் பெரியக்கா சொல்லுவா ?!

 அவாக்கும் நினைப்புத்தான் !

நான் எதோ அவட அழகில் .மயங்கிவிடுவன் என்று  !

அனோமாட அழகைவிட இவ பெரிய வடிவோ?

 உனக்கு அடி நிச்சயம் குண்டா.

 அவள் தான் போயிட்டாலே?
 நீ நினைப்பில் இரு உதுக்குத்தான் சொல்லுறனான் !

இந்த புக்கக் எல்லாம் வாசிக்காத என்று .


போடி !

ஒரு ஐஞ்சு நிமிடசம் என்ற சொல்லம் !

போகும் போது.

   நெட்டோ சோடா உனக்கு மட்டும் வாங்கித்தாரன் சுகி!

இதில்லே நில்லுங்கோ என்று வேட்டியை மடித்துக்கட்டினால் .

அங்கே நம்ம ஊர் பொடியங்களும் ,கடையில் நிற்கும் இளசுகளும் மயில் ஆட்டத்தில் போடும் குத்தாட்டம் ஒரு பிரபல்யம்  .

மொழிமறந்து மதம்  கடந்து ஆடுவோரில் எல்லாம் இளவட்டம்கள் மடிச்சுக்கட்டின வேட்டி!

 சேட்டுப்போட்ட டவுசர் மடித்த பண்டார சேர்ந்துவரும் ரவி .

என எல்லாரும் மயில் ஆடும் குயிலுக்கு அங்க அசைவுக்கு ஏற்ப அருகில் போய் ஆடும் போது !

பார்க்க வேண்டும் மச்சாளின் அக்கினிப்பார்வைகளை .


எப்போதும் பெண்களுக்கு தங்களுடன் வந்தவர்கள்  வீதியில் ஆடினால்  பட்டாசைவிட வெடிப்பார்கள் வீட்டில் வந்து  .


வெடி என்ன அடி என்ன ஆட்டம் தானே முக்கியம் !

ஆடியவலி அடுத்த நாள் தெரியும் வைரவர் வாகனத்துக்கு இருக்கும் மரியாதை  வீட்டில் ராகுலுக்கு கிடைக்கும்.


 போய் இவளுகளுக்கு தேர்காட்டு என்றால் ரோட்டில் காவலிப்போல  !

ஆடுகின்றாய் என்று தொடங்கும்  அது கிடக்கட்டிம் அதற்கு காரணம் பெரியமச்சாள் !

சித்தப்பாவிடம் சிண்டு முடிந்தது தான் சொல்லிவிட்டால் சுகி ராகுலுக்கு ரகசியமாக!


ஆனால் முதல் நாள் நேரலையில் சீத்தாரம் சொல்லுவார்!

 முக்கிய வீதியில் இருந்து தேர் உலாவின் சிறப்பு நிகழ்ச்சியோடு இணைந்து இருக்கும் மலையக சேவை நேயர்களே !


மதிய செய்தி  அறிக்கைக்கு  நாம்  கலையகம் திரும்புகின்றோம் !

வணக்கம் !

வணக்கம் மயில்வாகனந்தம் சர்வாணந்தா!

  கேட்கின்றதா ?

ஆம்  சீத்தாராமன் .

 இந்த நேரடி நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வளங்கும் பிரதான அனுசரனை ஆளார்கள் விளம்பரத்தையும்  எடுத்துவிட்டு!

  மதிய செய்தியின் பின் இணைந்து கொள்வோம்!!!!
தொடரும்!










//

28 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் --56

கோயில் திருவிழாக்களில் தான் மனம் குதூகலிக்கும் .

நாஸ்திகம் பேசுபவர்களும், ஆத்திகம் பேசுபவர்களும் ,ஆரவாரத்துடன் பார்க்கும் விழா இந்த அம்மனின் வீதி உலா .!

தீவில் இருந்து வந்த மச்சாள்மார்களுக்கும் ,மாமிமார்களுக்கும் சகோதரமொழி தெரியாது அப்போது .

அதனால் அவர்களை பின் தொடரும் வேலை ராகுலுக்கு செல்லன் மாமா சொல்லியது.

 இவர்களுக்கு முதலில் எங்கே வீதியின் பெயர் என்றே தெரியாது .ஊருக்குப் புதுசு .

.தீவில் தேர்திருவிழா என்றால் குடும்பங்கள் ஒன்று சேர்வது போல இருந்த  காலம் யுத்த நிலையாலும் ,பாதுகாப்பு பிரதேசம் என்றும் எங்கள் குலத்தெய்வம் சிறைப்பட்ட பின் .

அதே சாயலில் இருக்கும் அம்மனைக்கான மனதில் ஆனந்தம் வரும் .

பரம்பரையாக தேர்த்திருவிழா செய்தவர்கள் ,விடுபட்டாச்சு ,

வலிகள் தந்த நினைவுகளால் கோயில் போகாத நிலை இருந்த மனங்களுக்கு கொஞ்சம் மறுமலர்ச்சி கொடுத்த கோவில் தேர் வீதியில் வரும் நிலை.

 தீவில் தேர்கள் எல்லாம் உள்வீதி, வெளிவீதி மட்டும் வரும் எப்போதும் .

முதல் முறையாக மச்சாள்களுக்கும் மாமிமார்களுக்கும் சிதம்பர சக்கரம் பார்த்த உணர்வு .காளி அம்மன் வீதி உலா வரும் காட்சி!

 கோயில் இருப்பது நகரில் இருந்து அன்னளவாக 4 மைல் தொலைவில் .

உடரட்டை ரயிலைப்போல நடந்து சென்றால்  1 மணித்தியாலம் பிடிக்கும் ,யாழ்தேவியாக வவுனியாவில் இருந்து காங்கேஸன் துறை போகும் வேகத்தில் சென்றால் 35 நிமிடத்தில் ரொக்கில் போய் சேரலாம் .

ஆலயத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை அந்த அம்மனே அன்பர்ளுக்கு நகருக்கு வந்து தர்சனம் கொடுக்கும் காட்சி .அழகர் ஐயா ஆற்றில் இறங்க மதுரை வரும் அழகைப்போல இருக்கும்!

வீதி உலாவுக்கு அம்மன் ரொக்கிலில் இருந்து பசரைவீதியூடாக காம்ன்ஸ்தாண்டி விகாரக்கொடை வந்தால் .

முதலில் புத்தனின் வாசலில் இருக்கும் யானை மணியடித்து வணங்கி
நிற்கும் .யானைப்பாகன் மகோ பத்தினி தெய்யோ ! என்று பாதம் குனிந்து வணங்கி நிற்பான் .

அம்மன் மெதுவாக வருவா நல்ல படங்கள் சத்தம் இல்லாமல் தியேட்டருக்கு வருவதைப்போல .

அது நீண்டு வங்கி வீதி ,கீழ்வீதி ,ஊடாக நகருக்கு வந்து பஸ்தரிப்பு நிலையம் தாண்டி பாசார் வீதி ஊடாக வலம் வந்து !

அந்த வீதியில் வரும் போது தான் அமைதியாக வந்தவர்கள்.

 தேருலாவில் தங்கள் இன்னொரு முகத்தை  காட்டுவார்கள் .

மைக்டெஸ்ரின் ,வணக்கம் உறவுகளே !!

ரொக்கில் காளியம் தேர் ஊற்சவம் இப்போது இந்த வீதியில் இருந்து உலாவந்துகொண்டிருக்கின்றது ,

மலையகசேவையூடாக அம்மனின் பெருமைகளை,
" மலைகள் எங்கள் கலைமகள்  "
ரொக்கில் காளியம்மன் வீதியுலா சிறப்புக்களை சேர்ந்தளிக்க
என்னோடு சக அறிவிப்பாளர் சீத்தாரமனிடம் ஒலிவாங்கியை கையளிக்கின்றேன் !"

நன்றி முத்தையா ஜெகன் மோகன் என்று அவர் விடைபெறும் விடயத்தை மச்சாளுக்கு காட்டும் போது !

ராகுல் சொல்லுவான் .

இஞ்ச பார்த்தியோ நேரடி அஞ்சல் நடக்குது .

இவர்தான் சீத்தாராமன். அறிவிப்பாளர் , நாடக எழுத்தாளர் ,வானொலி நாடகம் செய்வார் .

முத்தையா ஜெகனின் பாடல்கள் வித்தியாசம் , அவரும் ஒரு கவிஞர் தெரியுமோ ?

"ஏன்டா நீ அப்ப இங்க படிக்கிறதே இல்லையா "

இப்படியே ஊர்சுத்தியே பழகப்போறீயோ ?

இரு சித்தப்பாவிடம் சொல்லிக்கொடுக்கின்றேன் .

நீ சொன்னால் பயமோ ?

இப்படியே விட்டுட்டு ஓடினால் உனக்கு வீட்டை போகத்தெரியுமோ ?

இடம் தெரியாதவிடங்களில் விட்டுவிட்டாள் மச்சாள்மார்கள் வாயை அடைக்கலாம் என்பதை தெரிந்த பின் தான் ராகுல் அவர்களுடன் வம்பளப்பது.

வா இங்க பார்த்தியோ.

 இது தான் கரகம் .

நம்ம மூக்கையா ஆடும் ஆட்டம் பாரு .

என்று மச்சாளுக்கு காட்டும் போது .

எங்க பார்க்க?

 இவ்வளவு கூட்டமாக இருக்கு

."கூட்டம் மூக்கையா ஆட்டம் பார்க்க இல்லை ."

"முத்தழகு தட்டு எடுக்கும் போது கரகத்தின் சிறப்பைப் பார்க்கும் சிலபார்வைகள்

"சில்லறையாக அவளின் ஆட்டத்திற்கு சுருதி மீட்டும் ,

இலங்கையிலும் கரகம் ஆடும்  கலைஞர்கள் .நாவலப்பிட்டி ,ஹாட்டன் பதுளையில் மடுல்சீமைப்பக்கம் இருக்கின்றார்கள் .

இவர்களுக்கு ஊக்கிவிப்பு இல்லாத நிலையில் தான் .

இந்த கரகாட்டம்   ஆடும் கலைஞர்கள் எல்லாம் இன்று அரபுலக்கதில் வேறு தொழில்லில் இருக்கும் வேதனையை என்ன சொல்வது ?

 தாய் ஏற்றிவிட்ட பூங்கரகத்தை ஆடும் முத்தழகு .

குலமகள் அவளை விலைமகளாக பார்க்கும் சில கூட்டம் இந்த வீதி உலாவில் !

ஆடவந்த பின் அம்பலத்தில் ஆடினாலும் ,அந்த வீதியில் ஆடினாலும், ஆட்டக்காரி என்று சொல்லும் உள்ளங்களுக்குத் தெரியாது !

அந்த முத்தழகு வீட்டில்  இருக்கும் வறுமை நிலை .

மூத்த அக்காள் கலியாணம் தள்ளிப்போகும் நிலை.

 மூக்கையாவின் கலைமீதான ஆர்வம் தான் அவரை ஊர்தாண்டி நாவலப்பிட்டியில் கரகம் ஆடிவந்த காமாட்சியை கைபிடித்து கரகாட்டம் ஆடும் ஜோடியாக பல மலையக கோவில்களில் கரகம் ஆடும் நிலையைப்பற்றி!

கரகம் ஆடப்போவதால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் தான் செல்லன் மாமா வேலைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியது .

எங்கே கண்டாலும் மூக்கையா  ராகுலுக்கு வாசிக்க வேண்டியருவார் ஞானம் சஞ்சிகை, அகிலம் சஞ்சிகை என அதற்கு பரிசாக கொடுப்பது வெற்றிலையும் பாக்கும் தான் !

கொஞ்சம் வெள்ளைச்சுருட்டான திரிரோஸ்!

 அப்போது கரகம்  ! பார்க்க தோழில் தூக்கிய மச்சாள் சுகியும்  அவள் தோழில் சின்ன மச்சாள் ரதியும் தூக்கியிரிக்கும் போது  !

சரோஜா மாமி திட்டுவா .

"இறக்கிவிடு அவளை ,தோழில் எத்துறவயசா அவளுக்கு .

சும்மா அவளோடுட தனகாத .

நல்ல காலம் என் அம்மா பார்க்க இங்கு இல்லை இல்லையோ !

இந்தக்குமரியை இப்படி வளர்க்கிறீயோ ?என்று ஒப்பாரி வைப்பா "

சும்மா இருங்கோ மாமி  .

அவள் சின்னவள் குழந்தையில் இருந்து தூக்கும் எனக்கு சுகியின் பாரம் எல்லாம் ஒருமூட்டை கோர அரிசியும் வராத ,அக்காளும் ,தங்கையும் என்ன ஒரு புகையிலைச்சிற்பம் பாரம் கூட இல்லை .


கரகாட்டம் தெரியவில்லை தூக்கிக்காட்டினால் என்ன ?

இவளை நான்  விழுத்தியா போடுவன் .

மீசைமுளைச்சாலும்  உனக்கு அறிவு வளரல பெரியமச்சாள் பொறுமும் போது புரிந்து கொண்டான் .

அவளைமட்டும் தூக்கிறீயே சுகியோடு மட்டும்தான்  தூக்குக் காவடியோ ?

ஏன் உன்ற கொப்பர் சொல்லியிருந்தாரே மறந்துவிட்டியோ ?

குடிகாரன் மகன் கிட்ட வரமுடியுமோ என்ற மோள் கிளிமாதிரி என்று!

நான் பேரம்பலத்தார் பேரன் .

ஏதோ பாவம் கோயில் திருவிழா காட்டச் சொன்னதால் கூட வந்தன்.

 ஐயா வழியில் செம்பு எடுக்கமாட்டன்  எப்போதும் மச்சாள் .

ஓ அப்படியோ ?

பார்ப்பம் முதலில் பரீட்சையில் யார் பாஸ் ஆகுவது !

என்று இன்னும் 6 மாதம் இருக்கு  அடுத்த கடை போட எங்க அப்பாவும் வருவார் !

சுருட்டுக்குப் பாணிபோடுவது நீதான் .

அன்றே பெரியமச்சாள் முகத்தில் கரிபூசணும் என்று காத்திருந்தான் ராகுல்  !

இந்தப் பெரிய மச்சாளும் ராகுலும் ஒரு மாதம் வயது விதியாசம் ராகுல்  மூப்பு .

அவள் பெண்கள் கல்லூரியில் சாதாரண தரம் சேர்ந்து இருந்தால் .

சுகி போல அவளும் ,அவள் தங்கைகளும் அங்கே தான் படித்தார்கள் .

 வெளியில் பலருக்கு  அது தெரியாது !

செல்லன் மாமா  இந்த மச்சாள்மாருக்கு சித்தப்பா என்று மட்டும் எல்லாருக்கும் தெரியும் .!

அந்த வீதியில் கரகம் வர அதன் பின்னே வரும் ஆட்டம் யாழில் எங்கும் கானத ஆட்டம் !

தொடரும்!

//மோள்- மகள் யாழ்வட்டார மொழி!
தனகாத! - உரசாத யாழ் வட்டார மொழி!
பத்தினி தெய்யோ- அம்மனை சிங்களவர் பார்க்கும் பார்வை சீதையை அப்படித்தான் சொல்லுகின்றது அவர்கள் இதிகாசம்!
 அகிலம்/*ஞானம் சிறு சஞ்சிகைகள் முன்னர் மலையகத்தில் வெளிவந்தது!