அயிரம் நாமம் கொண்ட எங்கள் ஆத்தா அங்காலப்பரமேஸ்வரி அபிராமிப்பட்டரின் அந்தாதி பாடலில் அழகு மூக்குத்தி வடிவான தாயின் வீதி உலாவோடு மீண்டும் இணைகின்றோம் என்று முத்தையா ஜெகன் மோகன் ஒலி வாங்கியை வானொலியோடு இணைக்கும் போது அதை நாதஸ்வரம் கொண்டு பீப்பீ.. என வாசிப்பார் செல்லையா!
செல்லையா வடக்கில் அளவெட்டியில் குருகுலமாக இருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றவர். இந்தியன் ஆமிக்காலத்தில் பின் தான் அங்கிருந்து வந்து சொந்த ஊரில் தோட்ட வேலைகள் செய்தாலும் தன் கலையார்வத்தை சமயங்களின் போது மறக்காமல் வாசிப்பார். அவருக்குத் தெரியும் இந்த வீதியில் எந்த சுருட்டுக்கடை முதலாளிக்கு எந்த பக்திப்பாட்டு வாசித்தால் வெற்றிலையில் வைத்து அன்பளிப்புத் தருவார்கள் என்று.. அந்த அன்பளிப்பு அடுத்த நாள் அவர்கள் பிள்ளைகளுக்கு புதிய புதிய ஆடையாக போய்ச் சேரும். அவர் நல்லா வாசிக்க வேண்டும் என்றால் அவருக்கு உரு ஏற்ற வேண்டும்! உரு ஏற்றுவது என்றால்...? அது உனக்கு புரியாது சுகி எனக்குப் புரியும்! நீ அக்காளுக்கு முன் ஜொள்ளு வழியிறாய் என்று, இரு வீட்டில் பத்திவைக்கின்றேன் என்று சொல்ல, போடி உங்க அக்காளும் நீயும் நான் இங்கு வேற ஆளைப்பார்க்கின்றேன்!
ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா? இரு பங்கஜம் பாட்டிக்கு கடிதம் போடுறன் உன்ர பேரன் பதுளையில் கொழுந்து எடுக்கப்போறாராம் என்று..
நீயே பாட்டியிடம் போட்டுக்கொடுத்துவிடுவாய்போல...! அதைவிடு சுகி உரு என்று சொன்னது செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்! நீ வரவர மோசமாகிவிட்டாய் குண்டா படிக்கிறீயோ இல்லையோ இந்த வேலை எல்லாம் நல்லாச் செய்யிறாய்!
உங்க அப்பாதானே எல்லாம் பழக்கின்றார்! சுருட்டுக்கடை வியாபாரம் மட்டும் தான் வாழ்க்கை என்று... எனக்கு இது எல்லாம் பிடிக்காது பாரு, பரீட்சைமுடிய ஓடப்போறன்!
அது பிறகு பார்ப்பம் முதலில் தேங்காய் உடைக்கப் போறன், கொஞ்சம் தள்ளி நில்லு! வீதியுலா வரும் அம்மனுக்கு கும்பம் வைத்து பலர் பல படையல்கள் வைப்பார்கள்! கடலையும் அவலும் வாழைப்பழமும் மிதமிஞ்சிய அளவு போறவாற பக்தர்களுக்கு இந்த வீதியில் தாராளமாக கொடுப்பார்கள் சுருட்டுக்கடை முதலாளிமார்கள்! மஞ்சள் பூசிய தேங்காய் குவியலாக இருக்கும்; அதில் தான் வீரம் காட்டுவார்கள் இளையவர்கள்!
வருடத்துக்கு ஒரு முறை கட்டும் வெள்ளை வேட்டி சலவைக்காரன் திட்டித் திட்டி வெள்ளாவி வைக்க காரணம் தேங்காய் உடைத்தானா இல்லைமஞ்சள்த்தண்ணி ஊத்தின 16 வயதினிலே பாரதிராஜா படபாடலோ பாடிணவங்க போல மஞ்சளின் குளிர்த்தவனோ முதலாளி என்று அவர் தன் பங்குக்கு ராகுலுக்கு லாடம் கட்டினாலும், அந்த நேரம் தேங்காய் அடிக்கும் போது மாமாவில் நேற்று படம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்த்து உடைக்கும் சிதறு தேங்காய் அதுதான்! பலர் கூடி அடிக்கும் போது வரும் சந்தோஸம் வருடத்துக்கு ஒரு முறைதானே இதே ஊரில் என்றால் எத்தனை குவியல் தேங்காய் வைப்போம்! தேரடியில் உடைக்க என்ன செய்ய ஆத்தா இங்கவர வச்சிட்டா! அடுத்த முறை சரி ஊரில் பங்கஜம் பாட்டியோட சேர்ந்து உடைக்கணும் என்று வேண்டிக்கொண்டான் அம்மனிடம். தேங்காய் உடைத்தது போதும் ராகுல் இதை எல்லாருக்கும் கொடு எங்கிருந்து பார்க்கின்றார் செல்லன் மாமா என்று நிதானிக்காதவன் அவர் குரல் கேட்டதும் பெட்டிப்பாம்பு ஆகிவிடுவான்!. எல்லா அலுவலும் முடியும் போது தான் பெரியமச்சாள் உள்ளே போய்விட்டாள் என்ற உண்மை புரிந்து கொண்டான்! கோலாவில் ஒரு கூத்துக்கு அவன் செல்லையா அண்ணாவிடம் கொடுத்தான்! அவர் வாசிப்போடு தேர் இந்த வீதியைக் கடந்து செல்லவும் தேங்காய் பொறுக்குவார்கள் நகரசபை தொழிலாலிகள் ஆடி ஆடி வந்த அம்மன் இந்த வீதிகடந்து தன் கோயில் பீடம் செல்லும் பசறை வீதியூடாக....!
நீயே பாட்டியிடம் போட்டுக்கொடுத்துவிடுவாய்போல...! அதைவிடு சுகி உரு என்று சொன்னது செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்! நீ வரவர மோசமாகிவிட்டாய் குண்டா படிக்கிறீயோ இல்லையோ இந்த வேலை எல்லாம் நல்லாச் செய்யிறாய்!
உங்க அப்பாதானே எல்லாம் பழக்கின்றார்! சுருட்டுக்கடை வியாபாரம் மட்டும் தான் வாழ்க்கை என்று... எனக்கு இது எல்லாம் பிடிக்காது பாரு, பரீட்சைமுடிய ஓடப்போறன்!
அது பிறகு பார்ப்பம் முதலில் தேங்காய் உடைக்கப் போறன், கொஞ்சம் தள்ளி நில்லு! வீதியுலா வரும் அம்மனுக்கு கும்பம் வைத்து பலர் பல படையல்கள் வைப்பார்கள்! கடலையும் அவலும் வாழைப்பழமும் மிதமிஞ்சிய அளவு போறவாற பக்தர்களுக்கு இந்த வீதியில் தாராளமாக கொடுப்பார்கள் சுருட்டுக்கடை முதலாளிமார்கள்! மஞ்சள் பூசிய தேங்காய் குவியலாக இருக்கும்; அதில் தான் வீரம் காட்டுவார்கள் இளையவர்கள்!
அடுத்த விழா! பெளர்னமியில் நிலவு வெளிவர அந்த நிலவையும் மீறி இந்த வீதி ஜொலிக்கும்! அதுக்குள் வீட்டில் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள் எல்லாரும்! மாமியும் அவசரமாக புட்டு அவித்தா சாப்பாட்டுக்கு இரவு சாப்பாடு முடித்தபின் அடுத்த விழா சொர்க்க விழா!
தொடரும்...


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)